» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இருசக்கர வாகனங்கள் மோதல்: பிளஸ்-1 மாணவி உயிரிழப்பு - வாலிபர் மீது வழக்குப்பதிவு!
வியாழன் 2, ஏப்ரல் 2026 8:47:28 AM (IST)
வில்லுக்குறி அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 16 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மேக்காமண்டபம், மாறாங்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயன். இவர் தற்போது பனவிளை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது கடைசி மகள் அர்ச்சனா (16). இவர் தக்கலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு (பிளஸ்-1) படித்து வந்தார்.
கடந்த 30-ஆம் தேதி இரவு, அர்ச்சனா தனது இருசக்கர வாகனத்தில் நாகர்கோவிலுக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தார். வில்லுக்குறி அருகே வெள்ளச்சிவிளை என்ற பகுதியைச் சென்றடைந்தபோது, எதிரே அதிவேகமாக மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. எதிர்பாராத விதமாகக் கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் அர்ச்சனா தூக்கி வீசப்பட்டார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்குப்போராடிய அவரை, அங்கிருந்த பொதுமக்கள் மீட்டுச் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அர்ச்சனா ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், விபத்தை ஏற்படுத்தியதாக வில்லுக்குறி மேலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த ரெதீஷ் (21) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாகத் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அர்ச்சனாவின் குடும்பத்தினரிடையேயும், அப்பகுதி மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுபான்மையின தொண்டு நிறுவனங்களைக் குறிவைப்பதா? - மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 12:01:05 PM (IST)

தன்னையும் மக்களையும் நம்பாதவரே இரு தொகுதிகளில் போட்டி: விஜய் மீது சீமான் விமர்சனம்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 11:00:26 AM (IST)

இலவசமாக மணல் கேட்டு மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டர் - காவலர் பணி இடைநீக்கம்: எஸ்.பி., அதிரடி!
வியாழன் 2, ஏப்ரல் 2026 8:41:43 AM (IST)

டிடிவி தினகரன் ஏப்ரல் 6 முதல் பிரச்சாரம்: ஏப்.15-ல் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி!
புதன் 1, ஏப்ரல் 2026 5:26:46 PM (IST)

4 தொகுதிகளிலும் ‘உதயசூரியன்’ சின்னத்தில் ம.தி.மு.க. போட்டி: வைகோ அறிவிப்பு
புதன் 1, ஏப்ரல் 2026 5:21:27 PM (IST)

திருநெல்வேலி வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் ஆய்வு
புதன் 1, ஏப்ரல் 2026 4:43:34 PM (IST)







