» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காக்கும் கரங்கள் திட்டத்தில் பெண்களுக்கு வயது வரம்பு தளர்வு: ஆட்சியர் தகவல்
வெள்ளி 28, மார்ச் 2025 4:42:24 PM (IST)
முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில் கடனுதவி கோரி விண்ணப்பித்திட முன்னாள் படைவீரர்களை சார்ந்துள்ள பெண்களுக்கு வயது வரம்பு இல்லை என்று மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.

தற்போது, முன்னாள் படைவீரர்கள் அவர்தம் விதவையர் மற்றும் அவரைச் சார்ந்துள்ள திருமணமாகாத மகள் / விதவை மகள் மற்றும் படைப்பணியின்போது உயிர்நீத்த படைவீரரின் விதவையர் / அவரைச் சார்ந்துள்ள திருமணமாகாத மகள் / விதவை மகள் ஆகியோருக்கு முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் வாயிலாக கடனுதவி கோரி விண்ணப்பித்திட வயது வரம்பு இல்லை என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்னாள் படைவீரர் / விதவையரின் திருமணமாகாத மகனுக்கு அதிக பட்சமாக 25 வயது வரை மட்டுமே இத்திட்டத்தின் வாயிலாக விண்ணப்பித்திட இயலும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் PMEGP / PMFME /UYEGP/NEEDS/AABCS/BLISS/ Schemes under any TAHDCO or under any other Scheme for resettlement through Government of India (or) State Government ஆகிய இத்திட்டங்களில் பலன் பெற்றவர்கள் தகுதியற்றவர்களாவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் / அவர்தம் சார்ந்தோர்கள் மற்றும் படைப்பணியின்போது உயிர்நீத்த படைவீரரின் சார்ந்தோர்கள் இவ்வயது வரம்பு சலுகையினை பயன்படுத்தி இத்திட்டத்தில் கடனுதவி பெற்று பயன்பெறுமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சத்துணவுத் திட்டத்தில் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 10, ஏப்ரல் 2025 5:24:33 PM (IST)

பள்ளியில் மாணவியை தனியாக அமர வைத்த சம்பவம்: கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை!
வியாழன் 10, ஏப்ரல் 2025 3:51:34 PM (IST)

ம.சு. பல்கலைக்கழகத்தில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் மீது புகார்
வியாழன் 10, ஏப்ரல் 2025 3:23:38 PM (IST)

தாட்கோ மூலமாக விவேஷியஸ் அகடாமியில் பயிற்சி: இளைஞர்களுக்கு ஆட்சியர் அழைப்பு
வியாழன் 10, ஏப்ரல் 2025 12:48:33 PM (IST)

வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 10, ஏப்ரல் 2025 12:40:52 PM (IST)

பங்குனி உத்திர விழா எதிரொலி : குமரி மாவட்டத்தில் பூக்களின் விலை உயர்வு
வியாழன் 10, ஏப்ரல் 2025 12:31:16 PM (IST)
