» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ம.சு. பல்கலைக்கழகத்தில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் மீது புகார்
வியாழன் 10, ஏப்ரல் 2025 3:23:38 PM (IST)
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியைக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. படிப்பை முடித்துவிட்டு, அங்கேயே தற்காலிக பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பி.எச்.டி. பட்டம் பெறுவதில் இருந்து தற்போது வரை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஒரு பேராசிரியர் தனக்கு பாலியல் தொல்லை அளித்து வருவதாக, அந்த பேராசிரியை மாநில மகளிர் உரிமை ஆணையம் மற்றும் உயர்கல்வித் துறையிடம் கடிதம் மூலம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் குறித்து உயர்கல்வித்துறை மற்றும் மாநில மகளிர் உரிமை ஆணையம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த புகார் தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு பல்கலைக்கழக பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










