» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மொழியை வைத்து பிளவு ஏற்படுத்த முயற்சி: யோகி ஆதித்யநாத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி!

வியாழன் 27, மார்ச் 2025 10:41:42 AM (IST)

எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. மொழி திணிப்பையும் ஆதிக்கத்தையுமே நாங்கள் எதிர்க்கிறோம் என்று யோகி ஆதித்யநாத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். 

மொழியை வைத்து பிளவு ஏற்படுத்த தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முயல்வதாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார். யோகி ஆதித்யநாத்தின் இந்த பேச்சுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். 

இது தொடர்பாக மு.க ஸ்டாலின் கூறியிருப்பதாவது: எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. மொழி திணிப்பையும் ஆதிக்கத்தையுமே நாங்கள் எதிர்க்கிறோம். வாக்கு வங்கி அரசியலுக்காக பேசவில்லை; இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம். வெறுப்பு குறித்து யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம். இந்தி திணிப்பு மற்றும் பேரினவாதத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.

வாக்கு வங்கிக்கான கலவர அரசியல் இதுவல்ல. கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம். தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டின் குரல் நாடெங்கும் எதிரொலிப்பதால் பாஜக கலக்கம் அடைந்துள்ளது. பாஜகவினரின் பேட்டிகள் மூலம் இது தெரிகிறது" என்று பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education



New Shape Tailors





Thoothukudi Business Directory