» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.4,500 லஞ்சம் : கிராம நிர்வாக பெண் அலுவலர் கைது!
புதன் 22, ஜனவரி 2025 9:05:53 AM (IST)
சுரண்டை அருகே பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு விவசாயியிடம் ரூ.4,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அலுவலரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

பத்மாவதி, குமாரவேலை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்துவிட்டு தன்னை சந்திக்குமாறு கூறினார். 2 நாட்கள் கழித்து குமாரவேல், பத்மாவதியை மீண்டும் அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் செலவாகும் என பத்மாவதி கூறினார்.
அதற்கு குமாரவேல், தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றார். அப்படியானால் 5 ஆயிரம் ரூபாய் இல்லாமல் பட்டா மாற்ற முடியாது என்று பத்மாவதி கூறினார். கடைசியில் 4 ஆயிரத்து 500 ரூபாய் கொடுத்தால் மட்டுமே பட்டா மாற்ற முடியும் என பத்மாவதி தெரிவித்தார். ஆனால் லஞ்சம் கொடுத்து பட்டா வாங்க விருப்பமில்லாத குமாரவேல், இதுபற்றி தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.
அதன்பேரில், தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை சூப்பிரண்டு பால்சுதர், இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ, சப்-இன்ஸ்பெக்டர் ரவி, கூடுதல் சப்-இன்ஸ்பெக்டர் வேணுகோபால் ஆகியோர் குமாரவேலிடம் ரசாயன பவுடர் தடவப்பட்ட 4 ஆயிரத்து 500 ரூபாயை கொடுத்து நேற்று காலை அனுப்பினர். போலீசார் கூறியபடி குமாரவேல், அந்த ரூபாய் நோட்டுகளை கிராம நிர்வாக அலுவலர் பத்மாவதியிடம் கொடுத்தார்.
அப்போது வெளியே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் உடனடியாக உள்ளே வந்து கையும் களவுமாக பிடித்து பத்மாவதியை கைது செய்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து ஆலங்குளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பட்டா மாற்றம் செய்வதற்கு ரூ.4,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைதான விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் ரூ.7,375 கோடியில் தொழில் முதலீடு : 19 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:48:05 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்திற்கு 20% வாக்குகள் உள்ளது: பிரசாந்த் கிஷோர் தகவல்!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:27:46 PM (IST)

திருக்குறள் பரத நாட்டிய போட்டியில் மாநில அளவில் முதலிடம்: மாணவிகளுக்கு ஆட்சியர் வாழ்த்து
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 3:46:38 PM (IST)

மாத்தூர் தொட்டிபாலத்தில் காமராஜரின் உருவம் பதித்த கல்வெட்டு சேதம்: காங்கிரஸ் கண்டனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 3:39:06 PM (IST)

பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் புற்றுநோய் தின கருத்தரங்கம்!!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 3:13:34 PM (IST)

விலைவாசி உயர்வு குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 11:32:09 AM (IST)

கந்தசாமிJan 22, 2025 - 12:04:05 PM | Posted IP 162.1*****