» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்டிரல்-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்

ஞாயிறு 27, அக்டோபர் 2024 9:24:14 AM (IST)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் நெல்லை-சென்னை சென்டிரல், சென்னை சென்டிரல்-கன்னியாகுமரி, சென்டிரல் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  நெல்லையில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ஏ.சி.எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.06074), மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து நாளை (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ஏ.சி.எக்ஸ்பிரஸ் ரயில் (06073), மறுநாள் காலை 7.15 மணிக்கு நெல்லை சென்றடையும்.

சென்னை சென்டிரலில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் அதிவிரைவு சிறப்பு ரயில் (06079), மறுநாள் மதியம் 12.45 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து நாளை (திங்கட்கிழமை) மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அதிவிரைவு சிறப்பு ரயில் (06080), மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும். இந்த ரயில் எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital


New Shape Tailors





Thoothukudi Business Directory