» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிவகாசியில் பட்டாசு விற்பனை 20 சதவீதம் வீழ்ச்சி : வியாபாரிகள் கவலை

திங்கள் 28, அக்டோபர் 2024 10:26:57 AM (IST)

சிவகாசியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பட்டாசு விற்பனை 20 சதவீதம் சரிந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்

விருதுநகர் மாவட்டத்தில் 2,500-க்கும் மேற்பட்ட சில்லறை பட்டாசு கடைகள் உள்ள நிலையில், கடை உரிமையாளர்கள் ஆயுத பூஜையிலிருந்து பட்டாசு விற்பனைக்கு தயாராகி வருகின்றனர். ஆனால் இந்த தீபாவளிக்கு வழக்கமாக இருப்பதை விட வாடிக்கையாளர் வருகை குறைவாக உள்ளது. கடைகளில் உள்ள கவுண்டர்கள் வாடிக்கையாளர்கள் இல்லாமல் வெறிச்சோடியுள்ளன.

மக்கள் ஆன்லைன் ஷாப்பிங்கை விரும்புவதும், மாத இறுதியில் தீபாவளி பண்டிகை நடைபெறுவதும் விற்பனை வீழ்ச்சிக்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பயணச் செலவைக் குறைக்கவும், குறைந்த விலையில் உயர்தர பட்டாசுகளை வாங்கவும், தமிழகத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்கிறார்கள் என்று கூறுகின்றனர்.

சிவகாசியில் சொந்தமாக கடைகளை வைத்திருப்பது போல் நடித்து, ஆன்லைனில் பட்டாசுகளை விற்கும் மோசடியாளர்களுக்கு பல வாடிக்கையாளர்கள் பலியாகின்றனர் என்று சில பட்டாசு கடைக்காரர்கள் வருத்ததுடன் தெரிவித்துள்ளனர். சிவகாசியில் கடந்தாண்டை விட பட்டாசு விற்பனை 20 விழுக்காடு சரிந்துள்ளதால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர். ஆன்லைனின் பட்டாசு விற்பதை முறைப்படுத்த அரசுக்கு பட்டாசு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

Arputham Hospital







Thoothukudi Business Directory