» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னையில் 16-ம் தேதி அதி கனமழை வாய்ப்பு: ரெட் அலர்ட் எச்சரிக்கை!

திங்கள் 14, அக்டோபர் 2024 5:28:44 PM (IST)

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. 

இதுதொடர்பாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் அளித்த பேட்டியில், "தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதன்படி விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டையில் மிக பலத்த மழை பெய்யக்கூடும். இதனால் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். சென்னையில் 20 செ.மீ மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை 3 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதன்படி திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.

சென்னை உட்பட 12 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதன்படி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை மற்றும் புதுச்சேரியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டையில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் (16ம் தேதி) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கனமுதல் அதி கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை கோடப்பாக்கத்தில் நேற்று 50 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும். வடகிழக்கு பருவமழை நாளை அல்லது நாளை மறுநாள் தொடங்கும். வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. பருவமழை காலங்களில் பெய்யும் மழையால் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை. மீனவர்கள் இன்று முதல் 16-ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம். சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று பாலச்சந்திரன் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital

New Shape Tailors






Thoothukudi Business Directory