» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல் : அருவிகளில் உற்சாக குளியல்!

சனி 12, அக்டோபர் 2024 4:54:06 PM (IST)

தொடர் விடுமுறை எதிரொலியாக குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமான குற்றாலத்தில், அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் குளித்து மகிழ்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.

தற்போது குற்றால அருவிகளில் நீர்வரத்து சீராக இருக்கும் நிலையில், ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. இன்று காலை முதல் குற்றாலம் மெயின் அருவியில் நூற்றுக் கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் உற்சாக குளியலில் ஈடுபட்டு, புகைப்படம் எடுத்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், குற்றாலம் அருவிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors




Arputham Hospital




Thoothukudi Business Directory