» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையில் சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு நாளை ஆய்வு!

செவ்வாய் 22, அக்டோபர் 2024 12:36:38 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (அக்.23) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழுவினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். 

இது தொடர்பாக ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2024-2025-ஆம் ஆண்டிற்கான பொது நிறுவனங்கள் குழு 23.10.2024 அன்று குழு தலைவர் / அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் A.P.நந்தகுமார் தலைமையில் குழு உறுப்பினர்கள் ஆகியோர் வருகை புரியவுள்ளார்கள்.

மேலும், இக்குழுவினர் 23.10.2024 அன்று காலை திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் போன்ற பல்வேறு பணிகள் குறித்து நேரில் சென்று, ஆய்வு மேற்கொள்ள உள்ளார்கள்.

அதனைத்தொடர்ந்து, பிற்பகல் 3.00 மணி அளவில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர்.A.P.நந்தகுமார் தலைமையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மருத்துவர்.கா.ப.கார்த்திகேயன், முதன்மைச் செயலாளர் முனைவர்.கி.சீனிவாசன் , தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் மாவட்டத்தில் தணிக்கை பத்திகள் மற்றும் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors




Arputham Hospital




Thoothukudi Business Directory