» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம்!
வெள்ளி 11, அக்டோபர் 2024 12:48:50 PM (IST)
தமிழகத்தில் 16ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மத்திய கிழக்கு அரபிக் கடல், கர்நாடகா - கோவா கடற்கரை பகுதிகளில் நீடிக்கிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனைத் தொடர்ந்து தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் 12-ம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக வருகிற 16-ந்தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
இந்த நிலையில, கனமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட அளவில் உள்ள அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கைலாசா நாடு எங்குள்ளது? உயர்நீதிமன்றம் கேள்விக்கு நிதியானந்தாவின் சீடர் பதில்
வியாழன் 19, ஜூன் 2025 5:30:04 PM (IST)

சாலை விபத்தில் வருவாய் கோட்டாட்சியர் உயிரிழப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
வியாழன் 19, ஜூன் 2025 5:15:37 PM (IST)

மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபான விற்பனை: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!
வியாழன் 19, ஜூன் 2025 5:10:23 PM (IST)

கத்திப்பாரா மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
வியாழன் 19, ஜூன் 2025 4:50:07 PM (IST)

கொடிக் கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு எதிராக சட்டப்போராட்டம்: முத்தரசன் வலியுறுத்தல்!
வியாழன் 19, ஜூன் 2025 4:01:06 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தில் மருத்துவர் அணி பொறுப்பாளர்கள் நியமனம்: விஜய் அறிவிப்பு
வியாழன் 19, ஜூன் 2025 12:53:57 PM (IST)
