» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பள்ளி மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை: ஆசிரியர் போக்சோவில் கைது

திங்கள் 16, செப்டம்பர் 2024 3:55:19 PM (IST)

கோத்தகிரியில் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஓரசோலை ஓடப்பார்வை பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு கோத்தகிரி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இந்தி மற்றும் ஆங்கில ஆசிரியராக பணி புரிந்து வந்தார். அப்போது அந்தப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்த மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. 

தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மாணவி பெற்றோரிடம் கூறினார். அதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் குன்னூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதில், ஆசிரியர் ரஞ்சித் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ரஞ்சித்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital




Thoothukudi Business Directory