» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் வெயில் வாட்டி எடுக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

புதன் 18, செப்டம்பர் 2024 4:58:05 PM (IST)

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும் வரை தமிழகத்தில் வெயில் வாட்டி எடுக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நீலகிரி, ராணிப்பேட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளது. ஆனால் சமவெளிப் பகுதிகளில் தொடர்ந்து வெப்பத் தாக்கம் அதிகமாக உள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்கள் புதுச்சேரியில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது செப்., 23 வரை நீடிக்கும்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று இயல்பைவிட 4 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும். வெப்பநிலை மற்றும் காற்றின் ஈரப்பதம் அதிகரிப்பால் வெப்பத் தாக்கம் கடுமையாக இருக்கும். வெளியில் செல்வோருக்கு உடல் ரீதியாக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னையில் பகல் நேரத்தில் 102 டிகிரி பாரன்ஹீட் அதாவது 39 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


CSC Computer Education

New Shape Tailors







Thoothukudi Business Directory