» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வகுப்பறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை : ஆசிரியர் மீது போக்சோ வழக்கு!
வியாழன் 19, செப்டம்பர் 2024 8:33:33 AM (IST)
நெல்லை அருகே வகுப்பறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நெல்லை பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் ஹென்றி செல்வன் ராஜ்குமார். இவர் நெல்லை அருகே ஒரு கிராமத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன் மாணவி ஒருவருக்கு வகுப்பறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். இதில் ஆசிரியர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஹென்றி செல்வன் ராஜ்குமாரை தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் உத்தரவிட்டார். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் நேற்று முன்தினம் நெல்லை ஊரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியம்மாள் விசாரணை நடத்தி, ஆசிரியர் ஹென்றி செல்வன் ராஜ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். ஆனால் அவர் தலைமறைவாக உள்ளதால் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
NAAN THAANSep 19, 2024 - 11:33:39 AM | Posted IP 172.7*****