» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கஞ்சா வியாபாரியிடம் பணம் பறித்த எஸ்.ஐ., ஏட்டு 'சஸ்பெண்ட்'
திங்கள் 16, செப்டம்பர் 2024 8:40:50 AM (IST)
தூத்துக்குடி அருகே கஞ்சா வியாபாரியிடம் பணம் பறித்த எஸ்.ஐ., ஏட்டு 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்துார் காவல் நிலையத்தில் எஸ்.ஐ., சுந்தரம், ஏட்டு குணசுந்தர் ஆகிய இருவரும் அதே பகுதி கஞ்சா வியாபாரி ஒருவரிடம் ரூ.9 லட்சம் அபகரித்தனர். கஞ்சா வியாபாரி தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., ஆல்பர்ட் ஜானிடம் புகார் தெரிவித்தார்.
திருச்செந்துார் டி.எஸ்.பி. வசந்தராஜ் விசாரித்தார். பணம் பறித்தது உண்மை என தெரியவந்ததால் எஸ்.ஐ., ஏட்டு, ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில் நேற்று இருவரும் 'சஸ்பெண்ட் 'செய்யப்பட்டனர்.