» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

புதன் 17, ஏப்ரல் 2024 12:02:02 PM (IST)

திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. தி.மு.க. அளித்த வாக்குறுதிகளில் 10 சதவீதத்திற்க்கும் குறைவான அறிவிப்புகளை மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன; ஆனால் 98 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். தி.மு.க. கூறுவது அனைத்தும் பச்சைப்பொய்.

தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க திமுக அரசு தவறிவிட்டது. மேகதாதுவில் அணை கட்டுவதில் கர்நாடகா அரசு உறுதியாக உள்ளது; அதனை திமுக எதிர்க்கவில்லை. தி.மு.க. ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.

பா.ஜ.க. ஆட்சிக்கு பிறகு பெட்ரோல்,டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை குறந்தபோதும், இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலை குறையவில்லை. பா.ஜ.க.வும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்கள் எதையும், தமிழகத்திற்கு 10 ஆண்டுகளாக தரவில்லை. இயற்கைச் சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முறையாக வழங்குவதில்லை. மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை மத்திய பா.ஜ.க. அரசு முழுமையாக வழங்குவதில்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை

அ.தி.மு.க.வை அழித்துவிடுவதாக அண்ணாமலை கூறுவது வெற்று வார்த்தைதான். டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கியது கூட தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார். பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வந்து செல்வதால் எந்த பயனும் இல்லை. தேர்த்ல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்பேன். உச்சநீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பயன்?. கொள்கைக்கு ஒத்த கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி; உரிமைகளை நிலைநாட்ட தனித்துதான் நிற்க வேண்டும்.

அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். தே.மு.தி.க. வேட்பாளர்களுக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அ.தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களித்து புதிய வரலாற்றுச் சாதனையை படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory