» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை: ஆட்சியர் உத்தரவு!

செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 3:24:12 PM (IST)

Edumeetcolle.jpg

15 நாட்களுக்கு மேலாகப் பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியர் விஷு மகாஜன் அறிவுறுத்தினார். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாதாந்திர மாவட்ட பள்ளிக் கல்வி செயல்பாடுகள் குறித்த மீளாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.

15 நாட்களுக்கு மேலாகப் பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களைச் சுகாதாரத்துறை, தொழிலாளர் நலத்துறை, மீன்வளத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை ஆகியவை ஒருங்கிணைந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றும் அல்லது தேர்ச்சி பெறாமலும் உயர்கல்வியில் (கலை மற்றும் அறிவியல் கல்லூரி / பாலிடெக்னிக் / ஐ.டி.ஐ) சேராத மாணவர்களின் தற்போதைய நிலைகளைக் கேட்டறிந்த ஆட்சியர், உயர்கல்வி வழிகாட்டுதல்கள் மூலம் அவர்களைக் கண்டறிந்து மீண்டும் கல்லூரிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் முனியசாமி மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory