» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடும்பத் தகராறில் விஷம் குடித்த வாலிபர் பலி!

புதன் 20, மே 2026 12:15:03 PM (IST)

தூத்துக்குடி அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாகப் பூச்சிக்கொல்லி மருந்து குடித்த வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள பேரிலோவன்பட்டி, மேலத்தெருவைச் சேர்ந்தவர் தனுஷ்கோடி மகன் முத்து வீர சின்னையா (39). இவரது மனைவி காயத்ரி. இந்நிலையில், முத்து வீர சின்னையா அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அவரது மனைவி காயத்ரி கண்டித்துள்ளார். 

இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனையடைந்த முத்து வீர சின்னையா, கடந்த மே 15-ஆம் தேதி விஷப் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை குடும்பத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் தராமல் இன்று காலை அவர் உயிரிழந்தார். இதுகுறித்து எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory