» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் திருநங்கை தூக்கிட்டுத் தற்கொலை: போலீசார் விசாரணை
புதன் 20, மே 2026 11:07:01 AM (IST)
தூத்துக்குடியில் திருநங்கை ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி பெரியசாமிநகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி மகன் மதுரா என்ற முனீஸ்வரன் (19). இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாகத் திருநங்கையாக மாறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, பெரியசாமிநகரில் உள்ள ஒரு வீட்டில் திருநங்கைகளின் தலைவியான சானியா மற்றும் ரக்ஷிதா, எஸ்தர், ஸ்ரேயா ஆகிய சக திருநங்கைகளுடன் இணைந்து ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
திருநங்கை மதுராவும், முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரும் கடந்த சில காலமாகத் தீவிரமாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை வீட்டில் மதுரா மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது, அவர் காதலர் சந்தோஷ் உடன் செல்போனில் பேசும் போது, இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மன வருத்தத்திற்கு ஆளான மதுரா, தான் தங்கியிருந்த வீட்டில் சேலையால் தூக்குப் போட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தூக்கில் தொங்கிய மதுராவை மீட்டு அவசரச் சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த தலைமை மருத்துவர், மதுரா ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்துத் திருநங்கைகளின் தலைவி சானியா (39) தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் செந்தட்டி மற்றும் இன்ஸ்பெக்டர் திருமுருகன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்கொலைக்குக் காரணமான காதல் தகராறு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் நாளை மின்தடை!
புதன் 20, மே 2026 8:35:37 PM (IST)

தூத்துக்குடி எஸ்பியாக அபிஷேக் குப்தா ஐ.பி.எஸ் நியமனம் - தமிழக அரசு உத்தரவு!
புதன் 20, மே 2026 8:18:36 PM (IST)

தூத்துக்குடி - மும்பை ரயில் 7½ மணி நேரம் தாமதம்: இன்று இரவு 11.00 மணிக்கு புறப்படும்!
புதன் 20, மே 2026 7:58:41 PM (IST)

தூத்துக்குடியில் மே 22-ல் மின்தடை அறிவிப்பு!
புதன் 20, மே 2026 5:45:57 PM (IST)

தூத்துக்குடி விமான நிலையத்தில் முறையற்ற கட்டணம் வசூல் : கனிமொழி எம்பி தலையிட கோரிக்கை!
புதன் 20, மே 2026 4:15:50 PM (IST)

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திருச்செந்தூர் ஸ்டார்ஸ் மாடல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சாதனை!
புதன் 20, மே 2026 3:54:24 PM (IST)










