» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வெளிநாட்டில் இருந்து திரும்பிய வாலிபர் தற்கொலை: போலீாசர் விசாரணை!

புதன் 6, மே 2026 8:26:15 AM (IST)

கழுகுமலை அருகே வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீாசர் விசாரணை நடத்தி வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள கே.லட்சுமிபுரம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்து மகன் முத்துக்குமார் (26). இவர் வெளிநாட்டில் சுமார் 3 ஆண்டுகள் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்துவிட்டு, கடந்த மாதம் தான் ஊருக்குத் திரும்பியுள்ளார்.

இந்த நிலையில், குடும்பப் பிரச்சினை காரணமாக மனமுடைந்த முத்துக்குமார், சம்பவத்தன்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலையில் சிகிச்சை பலனின்றி முத்துக்குமார் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்துக் கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory