» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த ஓட்டுநர் உயிரிழப்பு!
புதன் 6, மே 2026 8:48:47 AM (IST)
கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டியில் வீட்டின் படிக்கட்டில் ஏறியபோது நிலைதடுமாறி கீழே விழுந்த ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் முத்துக்குமார் (41). இவர் விருதுநகர் மாவட்டம் நள்ளியில் உள்ள தனியார் சிமெண்ட் தொழிற்சாலையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார்.
கடந்த திங்கள்கிழமை அன்று தனது வீட்டிற்கு வந்திருந்த முத்துக்குமார், இரவு நேரத்தில் வீட்டின் மாடிக்குச் செல்வதற்காகப் படிக்கட்டில் ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாகப் படிக்கட்டில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை, உறவினர்கள் மீட்டு உடனடியாகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் முத்துக்குமாரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: மீனவர் கைது
புதன் 6, மே 2026 4:05:03 PM (IST)

தூத்துக்குடியில் ம.தி.மு.க.வின் 33-வது ஆண்டு தொடக்க விழா - கட்சியினர் உற்சாகக் கொண்டாட்டம்
புதன் 6, மே 2026 3:06:18 PM (IST)

குழந்தைகளுக்கான ஆரோக்கியமான சுவையான ஸ்நாக்ஸ்!
புதன் 6, மே 2026 12:21:48 PM (IST)

தூத்துக்குடியில் மீனவருக்கு கத்திக்குத்து: 3 பேர் கைது
புதன் 6, மே 2026 12:10:26 PM (IST)

கட்டபொம்மன் விழாவை அரசு நடத்த கோரிக்கை!
புதன் 6, மே 2026 10:58:31 AM (IST)

திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் கொடை விழா : சாமி வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!
புதன் 6, மே 2026 8:51:57 AM (IST)










