» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசுப் பேருந்தில் சோகம்: பயணி திடீர் உயிரிழப்பு!
புதன் 6, மே 2026 8:12:25 AM (IST)
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சென்னையில் இருந்து கன்னியாகுமரி நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் பயணித்த நபர் ஒருவர் திடீரென உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு புத்தேரியைச் சேர்ந்த ஏசு நசரேன் (59) என்பவர், கடந்த திங்கள்கிழமை சென்னையில் இருந்து அரசுப் பேருந்து மூலம் தனது ஊருக்குப் புறப்பட்டுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் வில்லிசேரி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, ஏசு நசரேன் எதிர்பாராத விதமாகத் திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக கயத்தாறு அருகே உள்ள சுங்கச் சாவடியில் பேருந்து நிறுத்தப்பட்டது. அங்கிருந்த தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: மீனவர் கைது
புதன் 6, மே 2026 4:05:03 PM (IST)

தூத்துக்குடியில் ம.தி.மு.க.வின் 33-வது ஆண்டு தொடக்க விழா - கட்சியினர் உற்சாகக் கொண்டாட்டம்
புதன் 6, மே 2026 3:06:18 PM (IST)

குழந்தைகளுக்கான ஆரோக்கியமான சுவையான ஸ்நாக்ஸ்!
புதன் 6, மே 2026 12:21:48 PM (IST)

தூத்துக்குடியில் மீனவருக்கு கத்திக்குத்து: 3 பேர் கைது
புதன் 6, மே 2026 12:10:26 PM (IST)

கட்டபொம்மன் விழாவை அரசு நடத்த கோரிக்கை!
புதன் 6, மே 2026 10:58:31 AM (IST)

திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் கொடை விழா : சாமி வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!
புதன் 6, மே 2026 8:51:57 AM (IST)










