» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு!

வியாழன் 30, ஏப்ரல் 2026 8:16:58 PM (IST)

தூத்துக்குடியில் தனியார் தொழிற்சாலையில் பணியில் இருந்தபோது மின்சாரம் தாக்கியதில், திருப்பூரைச் சேர்ந்த ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் பெரியபாளையத்தைச் சேர்ந்த சிவா என்பவரின் மகன் பிரசாந்த் (26). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பயிற்சி ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் ஆலையில் உள்ள பிளான்ட் பகுதியில் பிரசாந்த் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள 'ட்ரிப் போர்டில்' எதிர்பாராத விதமாக மின் கசிவு ஏற்பட்டுள்ளது. 

இதில் பிரசாந்த் மீது மின்சாரம் பயங்கரமாகப் பாய்ந்ததில், அவர் தூக்கி வீசப்பட்டு மயக்கமடைந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள், அவரை உடனடியாக மீட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரசாந்த் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital







Thoothukudi Business Directory