» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கழிவுநீர் கால்வாயில் விழுந்த ஆட்டை மீட்ட தீயணைப்பு வீரர்கள்: பொதுமக்கள் பாராட்டு!
சனி 25, ஏப்ரல் 2026 4:38:32 PM (IST)

தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய்க்குள் சிக்கிக்கொண்ட ஆடு ஒன்றை, தீயணைப்புத் துறையினர் 3 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கால்டுவெல் காலனி ஒன்றாவது தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு ஆடு எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்தது. கால்வாய் குறுகலாகவும், ஆழமாகவும் இருந்ததால் ஆட்டினால் தானாக வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கிக்கொண்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தூத்துக்குடி தீயணைப்பு நிலையப் பணியாளர்கள் மீட்புப் பணியில் இறங்கினர். உதவி மாவட்ட அலுவலர் கோமதி அமுதா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி எந்தவித காயமுமின்றி ஆட்டை பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட ஆட்டினை அதன் உரிமையாளரிடம் தீயணைப்புத் துறையினர் ஒப்படைத்தனர். கழிவுநீர் கால்வாயில் தவித்த வாயில்லா ஜீவனைத் துரிதமாகச் செயல்பட்டு மீட்ட தீயணைப்புத் துறை அதிகாரிகளையும், பணியாளர்களையும் அப்பகுதி பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில் கொடை விழாவில் தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: தூத்துக்குடியில் பரபரப்பு!
சனி 25, ஏப்ரல் 2026 5:04:13 PM (IST)

பைக் விபத்தில் வாலிபர் பலி - இருவர் படுகாயம் : குலசை கோவில் சென்று திரும்பியபோது சோகம்
சனி 25, ஏப்ரல் 2026 3:45:33 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவான வாக்குகள்: தொகுதி வாரியான தகவல்கள்!
சனி 25, ஏப்ரல் 2026 3:18:16 PM (IST)

வெல்டிங் ஒர்க்ஷாப் உரிமையாளர் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!
சனி 25, ஏப்ரல் 2026 11:45:34 AM (IST)

ரயிலில் புகையிலை, குட்கா கடத்தியவர் கைது : கோவில்பட்டி ரயில் நிலையத்தில் சிக்கினார்!
சனி 25, ஏப்ரல் 2026 11:20:09 AM (IST)

தூத்துக்குடியில் ஒருவர் கட்டையால் தாக்கி கொலை : மதுபோதையில் நண்பர் வெறிச்செயல்!
சனி 25, ஏப்ரல் 2026 10:21:03 AM (IST)







