» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு மீட்பு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 10:43:45 AM (IST)

தூத்துக்குடியில் வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள சாரைப்பாம்பை சிப்காட் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாகப் பிடித்தனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள மறவன்மடம் திரவியபுரம் 3-வது தெருவில் வசிப்பவர் தனசேகரன். இவரது வீட்டின் வரவேற்பு அறைக்குள் திடீரென பாம்பு ஒன்று புகுந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில், சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சோபாவின் அடியில் பதுங்கியிருந்த சுமார் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை வீரர்கள் லாவகமாகப் பிடித்தனர். பிடிபட்ட பாம்பு பின்னர் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பாம்பு பிடிபட்டதையடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர். வீட்டின் உட்புறத்தையும், சுற்றுப்புறங்களையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும் எனத் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில் கொடை விழாவில் தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: தூத்துக்குடியில் பரபரப்பு!
சனி 25, ஏப்ரல் 2026 5:04:13 PM (IST)

கழிவுநீர் கால்வாயில் விழுந்த ஆட்டை மீட்ட தீயணைப்பு வீரர்கள்: பொதுமக்கள் பாராட்டு!
சனி 25, ஏப்ரல் 2026 4:38:32 PM (IST)

பைக் விபத்தில் வாலிபர் பலி - இருவர் படுகாயம் : குலசை கோவில் சென்று திரும்பியபோது சோகம்
சனி 25, ஏப்ரல் 2026 3:45:33 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவான வாக்குகள்: தொகுதி வாரியான தகவல்கள்!
சனி 25, ஏப்ரல் 2026 3:18:16 PM (IST)

வெல்டிங் ஒர்க்ஷாப் உரிமையாளர் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!
சனி 25, ஏப்ரல் 2026 11:45:34 AM (IST)

ரயிலில் புகையிலை, குட்கா கடத்தியவர் கைது : கோவில்பட்டி ரயில் நிலையத்தில் சிக்கினார்!
சனி 25, ஏப்ரல் 2026 11:20:09 AM (IST)







