» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.1.80 கோடி பறிமுதல்; ரூ.89.41 லட்சம் விடுவிப்பு - ஆட்சியர் தகவல்!

செவ்வாய் 21, ஏப்ரல் 2026 5:50:02 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.1.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.89.41 லட்சம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தின் 6 தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இச்சோதனையில் இன்று (21.04.2026) வரை கைப்பற்றப்பட்ட விவரங்கள்: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக மொத்தம் ஒரு கோடியே 80 லட்சத்து 81 ஆயிரத்து 218 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ரூ.7,57,517 மதிப்பிலான மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில், அந்தந்த பகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து முறையான விளக்கம் அளித்தவர்களுக்கு, மாவட்ட அளவிலான குழுவின் பரிந்துரையின் பேரில் இதுவரை 89 லட்சத்து 41ஆயிரத்து 268 ரூபாய் உரியவர்களிடம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் விசு மகாஜன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory