» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீடு வீடாக வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா : திமுக பெண் நிர்வாகியிடம் ரூ.1.38 லட்சம் பறிமுதல்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 4:53:18 PM (IST)
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்ததாக திமுக பெண் நிர்வாகி ஒருவரைத் தேர்தல் பறக்கும் படையினர் பிடித்து பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு காவல் சரகத்திற்கு உட்பட்ட ஆத்திகுளம் ராமலிங்கபுரம் கிராமத்தில், அரசியல் கட்சியினர் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிப்பதாகத் தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் பறக்கும் படையினர் ஆத்திகுளம் பகுதியில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிக் கொண்டிருந்த பெண் ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (49) என்பதும், அவர் திமுக ஒன்றிய துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருவதும் தெரியவந்தது. அவரிடம் நடத்திய சோதனையில், வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக வைத்திருந்த ரூ.1,38,500 ரொக்கப் பணத்தைப் பறக்கும் படையினர் கைப்பற்றினர்.
முறையான ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், இது குறித்து கயத்தாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், மாரியம்மாளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சி நிர்வாகி பணப் பட்டுவாடா புகாரில் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.1.80 கோடி பறிமுதல்; ரூ.89.41 லட்சம் விடுவிப்பு - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 5:50:02 PM (IST)

தூத்துக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 5:28:39 PM (IST)

தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை : வாலிபர் கைது - 85 பாட்டில்கள் பறிமுதல்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 5:10:34 PM (IST)

அரசியல் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு: காவலர் சஸ்பெண்ட் - எஸ்பி அதிரடி உத்தரவு!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 4:46:18 PM (IST)

தேர்தல் கட்டுப்பாடுகளை மீறினால் 2 ஆண்டு சிறை : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 4:03:44 PM (IST)

முறைகேடு புகார்: தூத்துக்குடி மாநகராட்சியில் 3 டெண்டர்கள் மற்றும் பணி உத்தரவுகள் ரத்து!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 3:49:52 PM (IST)







