» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருமணமான 8 மாதத்தில் இளைஞர் தற்கொலை: கோட்டாட்சியர் விசாரணை !
சனி 11, ஏப்ரல் 2026 4:30:17 PM (IST)
தூத்துக்குடி அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் கடற்கரைச் சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் லாரன்ஸ் மகன் ஷால்வின் (23). கடல் தொழில் செய்து வந்த இவருக்கு, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சானியா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. கடல் தொழிலுக்காகச் சென்றிருந்த ஷால்வின், ஒரு மாதத்திற்குப் பிறகு நேற்று இரவு வீடு திரும்பியுள்ளார்.
அப்போது அவரது மனைவி சானியா ராமேஸ்வரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்துள்ளார். சானியாவை உடனடியாக வீட்டிற்கு வருமாறு ஷால்வின் அழைத்துள்ளார். ஆனால், அவர் வர தாமதமாகும் என்று கூறியதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஷால்வின், மது போதையில் வீட்டின் உட்புறம் உள்ள மரக்கட்டையில் சுடிதார் சால்வையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இன்று காலை இது குறித்துத் தகவல் அறிந்த தருவைகுளம் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றினர். திருமணமாகி 8 மாதங்களே ஆவதால், இந்தத் தற்கொலை குறித்து வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணை நடத்தப்பட வாய்ப்புள்ளது. காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்தல் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை: சிறப்புப் பார்வையாளர் பிரதாப் சிங் எச்சரிக்கை
சனி 11, ஏப்ரல் 2026 4:44:31 PM (IST)

கார் - பிக்கப் வாகனம் மோதி விபத்து: இளைஞர் பலி!
சனி 11, ஏப்ரல் 2026 4:33:49 PM (IST)

யார் பொறுப்பு? விழிப்புணர்வுத் திரைப்படம்: கலைஞர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பாராட்டு!
சனி 11, ஏப்ரல் 2026 4:05:07 PM (IST)

ஏப்ரல் 30-க்குள் சொத்துவரி செலுத்தினால் 5% தள்ளுபடி: தூத்துக்குடி மாநகராட்சி அறிவிப்பு
சனி 11, ஏப்ரல் 2026 3:14:31 PM (IST)

கள்ளச்சாராயம் குடித்து செத்தவனுக்கு 10 லட்சம்: இதுதான் திராவிட மாடல் வளர்ச்சியா? சீமான் ஆவேசம்!
சனி 11, ஏப்ரல் 2026 12:00:57 PM (IST)

தூத்துக்குடி அனல் மின் நிலைய ஊழியர் திடீர் மாயம்: போலீசார் விசாரணை
சனி 11, ஏப்ரல் 2026 11:24:20 AM (IST)







