» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருமணமான 8 மாதத்தில் இளைஞர் தற்கொலை: கோட்டாட்சியர் விசாரணை !

சனி 11, ஏப்ரல் 2026 4:30:17 PM (IST)

தூத்துக்குடி அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் கடற்கரைச் சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் லாரன்ஸ் மகன் ஷால்வின் (23). கடல் தொழில் செய்து வந்த இவருக்கு, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சானியா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. கடல் தொழிலுக்காகச் சென்றிருந்த ஷால்வின், ஒரு மாதத்திற்குப் பிறகு நேற்று இரவு வீடு திரும்பியுள்ளார். 

அப்போது அவரது மனைவி சானியா ராமேஸ்வரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்துள்ளார். சானியாவை உடனடியாக வீட்டிற்கு வருமாறு ஷால்வின் அழைத்துள்ளார். ஆனால், அவர் வர தாமதமாகும் என்று கூறியதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஷால்வின், மது போதையில் வீட்டின் உட்புறம் உள்ள மரக்கட்டையில் சுடிதார் சால்வையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இன்று காலை இது குறித்துத் தகவல் அறிந்த தருவைகுளம் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றினர். திருமணமாகி 8 மாதங்களே ஆவதால், இந்தத் தற்கொலை குறித்து வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணை நடத்தப்பட வாய்ப்புள்ளது. காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory