» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

யார் பொறுப்பு? விழிப்புணர்வுத் திரைப்படம்: கலைஞர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பாராட்டு!

சனி 11, ஏப்ரல் 2026 4:05:07 PM (IST)



'யார் பொறுப்பு?' (Who is Responsible?) என்ற சமூக விழிப்புணர்வுத் திரைப்படத்தின் கலைஞர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பாராட்டு தெரிவித்தார். 

தாம்பரம் காவல் ஆணையரகம் மற்றும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஆகியவை இணைந்து தயாரித்த 'யார் பொறுப்பு?' (Who is Responsible?) என்ற சமூக விழிப்புணர்வுத் திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல் நிகழ்வு தூத்துக்குடி ரிதம் ஸ்டுடியோவில் நடைபெற்றது.

இயக்குநர் அருந்ததி அரசு இயக்கத்தில் உருவான இத்திரைப்படம், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் திரையிடப்பட்டது. இந்த நிகழ்வில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

திரைப்படத்தைப் பார்வையிட்ட மேயர், சமூக அக்கறையுடன் இப்படைப்பை உருவாக்கிய படக்குழுவினரைப் பாராட்டினார். தொடர்ந்து, படத்தில் நடித்த கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் பங்களிப்பைப் பாராட்டி, அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

இந்தச் சிறப்புத் திரையிடல் நிகழ்வில் திரைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டப் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory