» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வன்முறையைத் தூண்டும் ரீல்ஸ்: வாலிபர் கைது - சமூக வலைதள பக்கம் முடக்கம்!

செவ்வாய் 24, மார்ச் 2026 4:05:17 PM (IST)

தூத்துக்குடியில், சமூக வலைதளங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியுடன் 'ரீல்ஸ்' வீடியோ வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி, தாளமுத்துநகர் தாய் நகரைச் சேர்ந்தவர் கணேஷ்குமார். இவரது மகன் கார்த்திக் (20). இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கத்தியைக் காட்டி மிரட்டுவது போன்றும், மோதலைத் தூண்டும் வகையிலும் தொடர்ந்து வீடியோக்களைப் பதிவிட்டு வந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தாளமுத்துநகர் எஸ்.ஐ., ராமச்சந்திரன் மற்றும் போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர். மேலும், வன்முறையைத் தூண்டும் வகையில் இருந்த அவரது இன்ஸ்டாகிராம் பக்கமும் உடனடியாக நீக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் ஆயுதங்களைக் காட்டி மிரட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தூத்துக்குடி காவல்துறை எச்சரித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital






Thoothukudi Business Directory