» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் மீது லாரி மோதி தனியார் நிதி நிறுவன மேலாளர் பலி: தூத்துக்குடி அருகே சோகம்!

புதன் 25, மார்ச் 2026 8:08:41 PM (IST)

தூத்துக்குடி அருகே பைக் மீது லாரி மோதிய கோர விபத்தில், தனியார் நிதி நிறுவன மேலாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி பூபால் ராயபுரம், 6-வது தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகன் சந்தன சுடலைமணி (22). இவர் தூத்துக்குடி பிரையண்ட் நகரில் உள்ள தனியார் கோல்டு ஃபைனான்ஸ்' நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தார்.

இன்று பணி நிமித்தமாகத் தனது ஹோண்டா யூனிகார்ன் இருசக்கர வாகனத்தில் குளத்தூர் பகுதிக்குச் சென்றுவிட்டு, மீண்டும் தூத்துக்குடி நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தார்.

தருவைகுளம் பால்நாடார் ஹோட்டல் அருகே அவர் வந்து கொண்டிருந்தபோது, தூத்துக்குடியில் இருந்து குளத்தூர் நோக்கி எதிரே வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சந்தன சுடலைமணி, பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய பனையூர் தெற்கு தெருவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் முனியசாமி (25) என்பவரைப் போலீசார் பிடித்துக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம் வயதிலேயே வங்கி அதிகாரியாகப் பணியாற்றி வந்த இளைஞர் விபத்தில் உயிரிழந்த சம்பவம், பூபல் ராயபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory