» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு!

புதன் 25, மார்ச் 2026 8:51:03 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை, போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்த சாம் டேவிட் (21) என்பவர், வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காகக் கஞ்சா வைத்திருந்ததாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இவர் மீது ஏற்கனவே போதைப்பொருள் விற்பனை தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையிலும், இளைஞர்களைச் சீரழிக்கும் வகையிலும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சாம் டேவிட் மீது, தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (1982) கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் காசிபாண்டியன் பரிந்துரை செய்தார்.

இதனைத் தொடர்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சி. மதன் பரிந்துரையின் பேரில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத், சாம் டேவிட்டை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவைத் தொடர்ந்து, வடபாகம் காவல் நிலைய போலீசார் இன்று  சாம் டேவிட்டை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital







Thoothukudi Business Directory