» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேர் விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு

வியாழன் 19, மார்ச் 2026 8:45:43 AM (IST)



கழுகுமலை கழுகாசல மூர்த்தி திருக்கோவில் தைப்பூசத் தேரோட்டத்தின் போது உயிரிழந்த தொழிலாளி சப்பாணிமுத்துவின் குடும்பத்திற்கு, கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசல மூர்த்தி திருக்கோவில் தைப்பூசத் தேரோட்டத்தின் போது, தேருக்குக் கட்டை போடும் பணியில் சப்பாணிமுத்து என்ற தொழிலாளி ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாகத் தேர்ச் சக்கரத்தில் சிக்கி அவர் உயிரிழந்தார்.

உயிரிழந்த தொழிலாளியின் குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்ததால், அவர்களுக்குக் கோவில் நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) கயத்தாறு ஒன்றியக் குழு சார்பில் தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இது தொடர்பாகக் கட்சியினர் பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.

இந்தத் தொடர் போராட்டத்தின் விளைவாக, கோவில் நிர்வாகம் தற்போது சப்பாணிமுத்துவின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீட்டுத் தொகையை வழங்கியுள்ளது. இது குறித்து கட்சியின் கயத்தாறு ஒன்றியக் குழு செயலாளர் எம். சாலமன் ராஜ் விடுத்துள்ள அறிக்கையில், "எங்களது கோரிக்கையை ஏற்று தொழிலாளியின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய கோவில் நிர்வாகத்திற்கு, கயத்தாறு ஒன்றியக் குழு சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்," எனக் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital






Thoothukudi Business Directory