» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞர் கைது

வியாழன் 19, மார்ச் 2026 11:42:00 AM (IST)

தூத்துக்குடியில் போலீசார் நடத்திய வாகனச் சோதனையில், 2 கிலோ கஞ்சா கடத்தி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்த ரூ.2லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது...

தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் ஜானகி தலைமையிலான போலீசார், நேற்று இரவு நகரின் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தூத்துக்குடி மட்டக்கடை பஜார் பகுதியில் இருசக்கர வாகனங்களை நிறுத்திச் சோதனையிட்டுக் கொண்டிருந்தனர்.

அவ்வழியே அதிவேகமாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது, அந்த வாகனத்தில் இருந்த பையில் 2 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த நபரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பிடிபட்ட நபர் தூத்துக்குடி கணேசபுரம் ஜார்ஜ் ரோடு பகுதியைச் சேர்ந்த அந்தோணி ராஜ் என்பவரின் மகன் காட்சன் (30) என்பது தெரியவந்தது. மேலும், இவர் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து இந்தக் கஞ்சாவை வாங்கி வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட 2 கிலோ கஞ்சாவின் மதிப்பு சுமார் 2 லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், காட்சனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவருக்குக் கஞ்சா விநியோகம் செய்த மர்ம நபர்களைப் பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital





Thoothukudi Business Directory