» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவர் கைது
ஞாயிறு 15, பிப்ரவரி 2026 9:25:37 AM (IST)
தூத்துக்குடியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி டவுன் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகர் (65). இவர் நேற்று முன்தினம் தூத்துக்குடியில் உள்ள ஒரு மகளிர் பள்ளியில் பயின்று வரும் 8 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், உடனடியாகப் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகத்தினர் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பிரபாகர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மீன்பிடி துறைமுகத்தில் கடலில் தவறி விழுந்த மீனவர் பரிதாப மரணம்: தூத்துக்குடியில் சோகம்!
ஞாயிறு 15, பிப்ரவரி 2026 7:27:06 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.86.94 கோடி திட்டப்பணிகள் : நகராட்சி நிர்வாக இயக்குநர் பி.மதுசூதன் ரெட்டி ஆய்வு
ஞாயிறு 15, பிப்ரவரி 2026 1:34:37 PM (IST)

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தல்: எஸ்.டி.கே. ராஜன் அணி வேட்பாளர்கள் பேராயரிடம் ஆசி!
ஞாயிறு 15, பிப்ரவரி 2026 1:23:31 PM (IST)

அன்னை ஜூவல்லர்ஸ் சார்பில் இலவச மருத்துவ முகாம்
ஞாயிறு 15, பிப்ரவரி 2026 1:00:58 PM (IST)
_1771168864.jpg)
தூத்துக்குடியில் சினிமா பாணியில் 8 கி.மீ விரட்டிச் சென்று கொள்ளையர்களைப் பிடித்த டி.எஸ்.பி!
ஞாயிறு 15, பிப்ரவரி 2026 10:56:15 AM (IST)

தூத்துக்குடி - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை : நிலம் கையகப்படுத்துதல் அறிவிப்பு வெளியீடு!
ஞாயிறு 15, பிப்ரவரி 2026 9:18:22 AM (IST)










