» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூரில் சுகாதார சீர்கேடு: பக்தர்கள் அவதி

புதன் 14, ஜனவரி 2026 11:42:57 AM (IST)



திருச்செந்தூரில் நடைபாதை முழுவதும் சேறும் சகதியுமாக சுகாதார சீர்கேடு நிலவுவதால் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர். 

உலக பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றன. பாத யாத்திரை பக்தர்கள் நடந்து செல்லும் நடை பாதையில் சேறும் சகதியுமாக குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. 

இதனால் பக்தர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். தற்போது பொங்கல் விடுமுறை மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் குவிந்து வருகின்றன. கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சுகாதாரமாக பேணவும், அங்குள்ள குப்பைகளை அகற்றவும் நகராட்சி நிர்வாகத்திற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital






Thoothukudi Business Directory