» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புகையிலை பொருட்களை கடத்தி வந்தவர் கைது - கார் பறிமுதல்!

வியாழன் 4, டிசம்பர் 2025 6:21:45 PM (IST)

நாசரேத் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக காரில் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். 275 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி சாத்தான்குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் நாசரேத் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சுந்தரம் மற்றும் போலீசார் இன்று (04.12.2025) வெள்ளமடம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் அவர் சாத்தான்குளம் தெர்க்கன்குளம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் பச்சைமால் (27) என்பதும் அவர் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக காரில் வைத்திருந்ததும் தெரியவந்நது.

உடனடியாக போலீசார் பச்சைமால் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து மொத்தம் 275 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மற்றும் ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து நாசரேத் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory