» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முன்னாள் ஊராட்சி தலைவரை கொல்ல முயற்சி : சட்ட கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது

வெள்ளி 5, டிசம்பர் 2025 8:20:37 AM (IST)

எட்டயபுரம் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை காரை ஏற்றி கொல்ல முயன்ற சட்டகல்லூரி மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள கீழஈராலை சேர்ந்த சீனித்தம்பி மகள் சீனிரச்சனா (19). இவர் கோவில்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த பிரியதர்ஷன் என்பவரை காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்தனர். மதுரை மாட்டுதாவணி அருகே வீடு எடுத்து தங்கியிருந்தனர். இந்நிலையில், சீனிரச்சனாவை அவரது கணவர் வீட்டில் அடைத்து வைத்து கொடுமைபடுத்தியதாக கூறப்படுகிறது. 

இது குறித்து தகவல் அறிந்து சீனித்தம்பி உடனடியாக மதுரை சென்று, மகளை மீட்டு மாட்டுதாவணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் மகளை கீழஈராலில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். இதையறிந்த பிரியதர்ஷன், அவரது நண்பர்களான மதுரை கே.கே.நகரை சேர்ந்த கண்ணன் மகன் விக்னேஷ்குமார், கண்ணனேந்தலை சேர்ந்த வைரமுத்து மகன் சாரதி மற்றும் கோவில்பட்டியை சேர்ந்த 2 பேருடன் நேற்று முன்தினம் கீழஈரால் வந்து, சீனித்தம்பி வீட்டின் கதவை தட்டிப் பிரச்சினை செய்துள்ளனர். 

இதையடுத்து அவர், தனது உறவினரான ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பச்சைப்பாண்டியனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து மகன் முத்துக்குமாருடன் அவர் அந்த வீட்டுக்கு சென்று பிரியதர்ஷன் தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களை அவதூறாக பேசிவிட்டு பிரியதர்ஷன் உள்ளிட்டோர் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

பின்னர் பச்சைப்பாண்டியன், முத்துக்குமார், சீனித்தம்பி ஆகியோர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே பேசிக் கொண்டிருந்தனர். அங்கு காரில் வந்த விக்னேஷ்குமார், சாரதி ஆகியோர் வந்துள்ளனர். திடீரென்று சின்னத்தம்பி உள்ளிட்டோரை காரை ஏற்றி கொல்ல முயன்றுள்ளனர். சுதாரித்து கொண்ட அவர்கள் தப்பிக்க முயன்றுள்ளனர். ஆனாலும் கார் மோதியதில் பச்சைப்பாண்டியன் காயமடைந்தார். 

உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் எட்டயபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து, விக்னேஷ்குமார் (22), சாரதி (19) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள் இருவரும் சட்டக்கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடதக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital




Thoothukudi Business Directory