» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கழுகாசலமூர்த்தி கோவிலில் பவுர்ணமி கிரிவலம் : திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு!

வெள்ளி 5, டிசம்பர் 2025 8:10:11 AM (IST)



கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு திரளான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். 

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரை கோவிலில் நேற்று முன்தினம் திருக்கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. நேற்று பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடைபெற்றது. காலை 7 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெற்றது.

மாலை 6 மணியளவில் பவுர்ணமி கிரிவலம் கோவில் முன்பிருந்து தொடங்கியது. இதை கிரிவல குழு தலைவர் மாரியப்பன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா! என்ற கோஷத்துடன் மலையை சுற்றி கிரிவலம் சென்று வழிபாடு நடத்தினர். இரவு 7 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடைபெற்றது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory