» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஆர்ஆர் பிரியாணி கடை திறப்பு விழா : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

வியாழன் 4, டிசம்பர் 2025 12:53:45 PM (IST)



தூத்துக்குடியில் ஸ்பின்னிங் மில் காம்ப்ளக்ஸில் புதிதாக சேலம் ஆர்ஆர் பிரியாணி கடையை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் சேலம் ஆர்.ஆர். பிரியாணி என்பது பல கிளைகளுடன் பிரியாணி மற்றும் சீன உணவுகளை வழங்கும் ஒரு பிரபல உணவகமாகும். சேலத்தில் தள்ளுவண்டி கடையில் தொடங்கி இன்று உலகளவில் பிரபலமடைந்துள்ளது. இந்த உணவகம் மட்டன் பிரியாணிக்கு சிக்கன் 65 இலவசமாக வழங்குவது, பக்கெட் பிரியாணிக்கு இலவச முன்பதிவு செய்வது போன்ற பல்வேறு சலுகைகளை வழங்குகிறது.

இந்த நிலையில், தூத்துக்குடி தமிழ்ச் சாலையில் ஸ்பின்னிங் மில் காம்ப்ளக்ஸில் புதிதாக சேலம் ஆர்ஆர் பிரியாணி கடை திறப்பு விழா நடைபெற்றது. ஆர்ஆர் பிரியாணி கடை உரிமையாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். சமூக நலன் மற்றும் மகளிர்  உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் புதிய கிளையை திறந்து வைத்தார். விழாவில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், திமுக நிர்வாகிகள் ஜீவன் ஜேக்கப், டாக்டர் மகிழ்ஜான் ஜீவன், மதிமுக மாவட்ட செயலாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  


மக்கள் கருத்து

ஆண்ட பரம்பரைDec 4, 2025 - 05:19:20 PM | Posted IP 104.2*****

எங்களுக்கு ஓசில கிடைக்குமா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education




Arputham Hospital





Thoothukudi Business Directory