» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நிருபர் மீது தாக்குதல்: தூத்துக்குடியில் பரபரப்பு!
வியாழன் 4, டிசம்பர் 2025 10:16:09 AM (IST)

தூத்துக்குடியில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக புகார் குறித்து செய்தி சேகரிக்க சென்ற நிருபர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி கோரம்பள்ளத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் தனியார் நாளிதழில் நிருபராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு இவருக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. அதில் பேசிய நபர், எப்சிஐ குடோன் எதிரே உள்ள டாஸ்மாக் கடையில் நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மது விற்பதாக புகார் கூறியுள்ளார்.
இதையடுத்து பாலசுப்பிரமணியன் அந்த டாஸ்மாக் கடைக்கு நேரில் சென்று செய்தி சேகரிக்க சென்றுள்ளார். டாஸ்மாக் ஊழியர்களிடம் விசாரித்தபோது ஊழியர்கள் 5பேர் சேர்ந்து பாலசுப்பிரமணியனை கடுமையாக தாக்கினார்களாம். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் பாலசுப்பிரமணியத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயலலிதா நினைவு தினம் : அதிமுக சார்பில் மரியாதை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:52:22 PM (IST)

தூத்துக்குடியில் மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து : பால் வியாபாரி உயிரிழப்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:04:32 PM (IST)

மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் நிர்ணயம் : ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 11:51:25 AM (IST)

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மதவாத அரசியலை மக்கள் முறியடிப்பார்கள்: கனிமொழி
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:34:19 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன் கைது : தூத்துக்குடியில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:25:52 AM (IST)

முன்னாள் ஊராட்சி தலைவரை கொல்ல முயற்சி : சட்ட கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:20:37 AM (IST)










podhu janamDec 4, 2025 - 05:13:00 PM | Posted IP 172.7*****