» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி உயிரிழப்பு

புதன் 3, டிசம்பர் 2025 5:36:09 PM (IST)



கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி பரிதாபமாக  உயிரிழந்தனர். 

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் கடற்கரை (68), வியாபாரி. இவரும், மனைவி வள்ளியம்மாளும் (50) கோவில்பட்டி, வேலாயுதபுரத்தில் உள்ள கருப்பசாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பைக்கில் ஊருக்குத் திரும்பினர். அவர்கள் மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சாலைப்புதூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கார் மோதியதில் கடற்கரை, வள்ளியம்மாள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மேற்கு காவல் நிலையப் போலீசார் சடலங்களைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து, போலீசார் வழக்குப் பதிந்து, கன்னியாகுமரி மாவட்டம், மணியன்குவி பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ச. அபிலேஷிடம் விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital






Thoothukudi Business Directory