» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கடலோர பாதுகாப்பு குழுமத்தில் 51 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
புதன் 3, டிசம்பர் 2025 3:57:07 PM (IST)
கடலோர பாதுகாப்பு குழுமத்தில் ரோந்து படகுகளை இயக்கும் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக தூத்துக்குடி கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமம் கூடுதல் காவல் இயக்குனர் சஞ்சய்குமார் அறிவிப்பில் கூறியுள்ளபடி, தற்போது தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுத்திற்கு கடல் ரோந்து பணிக்காக மொத்தம் 20 படகுகள் (05 டன் படகுகள் 9-ம், 12 டன் படகுகள் 11-ம்) அரசால் வழங்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட படகுகளை இயக்குவதற்காக ஒப்பந்த அடிப்படையில் Indian Coast Guard மற்றும் Indian Navy-யில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களிடமிருந்து விண்ணப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது.
பணியிடங்கள்:
உதவி ஆய்வாளர் தரத்தில்: 10 நபர்கள்
தலைமை காவலர் தரத்தில்: 41 நபர்கள்
மொத்தம்: 51 நபர்கள்
சம்பளம் (அடிப்படை):
உதவி ஆய்வாளர் பதவிக்கு: மாதம் ரூபாய் 36,900/- (இதர படிகளும் சேர்த்து வழங்கப்படும்)
தலைமை காவலர் தரத்தில்: ரூபாய் 20,600/- (இதர படிகளும் சேர்த்து வழங்கப்படும்)
தகுதி மற்றும் நிபந்தனைகள்:
விண்ணப்பதாரர்கள் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே.
இந்த ஒப்பந்தம் வருடம் ஒரு முறை புதுப்பித்து தரப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்தை பயன்படுத்தி படிவத்தை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: கூடுதல் காவல் இயக்குனர், கடலோர பாதுகாப்பு குழுமம், தலைமை, DGP office Campus, Dr. Radhakrishnan Salai, சென்னை-600004.
கடைசி தேதி: 17.12.2025-ந் தேதிக்கு முன்னதாக அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்தகவலை தூத்துக்குடி கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயலலிதா நினைவு தினம் : அதிமுக சார்பில் மரியாதை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:52:22 PM (IST)

தூத்துக்குடியில் மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து : பால் வியாபாரி உயிரிழப்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:04:32 PM (IST)

மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் நிர்ணயம் : ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 11:51:25 AM (IST)

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மதவாத அரசியலை மக்கள் முறியடிப்பார்கள்: கனிமொழி
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:34:19 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன் கைது : தூத்துக்குடியில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:25:52 AM (IST)

முன்னாள் ஊராட்சி தலைவரை கொல்ல முயற்சி : சட்ட கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:20:37 AM (IST)









