» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: தலைமை அலுவலகத்தில் முற்றுகை!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 12:40:58 PM (IST)

தூத்துக்குடியில் காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் திட்டம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காலி பாட்டில்களை திரும்பி ஒப்படைக்கும் திட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களை பயன்படுத்தக் கூடாது மாற்றாக பார் நடத்தும் ஒப்பந்ததாரர்களை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள 123 டாஸ்மாக் கடைகளை அடைத்து விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் சிப்காட் வளாகத்தில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் மதுரை மண்டல மேலாளர் இளவரசன், மாவட்ட மேலாளர் அய்யப்பன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயலலிதா நினைவு தினம் : அதிமுக சார்பில் மரியாதை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:52:22 PM (IST)

தூத்துக்குடியில் மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து : பால் வியாபாரி உயிரிழப்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:04:32 PM (IST)

மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் நிர்ணயம் : ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 11:51:25 AM (IST)

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மதவாத அரசியலை மக்கள் முறியடிப்பார்கள்: கனிமொழி
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:34:19 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன் கைது : தூத்துக்குடியில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:25:52 AM (IST)

முன்னாள் ஊராட்சி தலைவரை கொல்ல முயற்சி : சட்ட கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:20:37 AM (IST)










டேய்Dec 2, 2025 - 12:58:57 PM | Posted IP 172.7*****