» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முறையாக பராமரிப்பு இல்லாத பிரண்டார்குளம்: வீணாகும் மழைநீர் - விவசாயிகள் வேதனை!
திங்கள் 1, டிசம்பர் 2025 12:34:14 PM (IST)

நாசரேத் அருகே உள்ள பேய்க்குளம் பிரண்டார் குளத்தின் மடை முறையாக பராமரிக்கப் படாததால், தண்ணீர் வீணாக வெளியேறி செல்வதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகேயுள்ள பேய்க்குளத்தை அடுத்து பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பிரண்டார்குளம் உள்ளது. இந்த குளத்தில் கடந்த பல ஆண்டுகளாக, மடைகள் சரிவர பராமரிக்கப்படாமல் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.இதனை சீரமைக்கக் கோரி,விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிகழ்ச்சியில், மழைக் காலத்திற்கு முன்னதாக மடைகள் மற்றும் குளத்து கலுங்கு பகுதி சீரமைக்கப்படாததால், கலுங்கு சேதம் அடைந்த நிலையிலும், குளத்து மடையிலிருந்து, நீர் 24 மணி நேரமும் வெளியேறிய நிலையில் உள்ளது. இதனால் சேமிக்கப்பட வேண்டிய குளத்து நீர் வெளியேறி, சில நாட்களிலேயே குளம் வறண்டு போகும் அபாயம் உள்ளது.
எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, கலுங்கு பகுதி மற்றும் மடைகளிலிருந்து தண்ணீர் வெளியேறாமல் இருக்க மடையை சீரமைத்து தர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயலலிதா நினைவு தினம் : அதிமுக சார்பில் மரியாதை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:52:22 PM (IST)

தூத்துக்குடியில் மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து : பால் வியாபாரி உயிரிழப்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:04:32 PM (IST)

மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் நிர்ணயம் : ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 11:51:25 AM (IST)

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மதவாத அரசியலை மக்கள் முறியடிப்பார்கள்: கனிமொழி
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:34:19 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன் கைது : தூத்துக்குடியில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:25:52 AM (IST)

முன்னாள் ஊராட்சி தலைவரை கொல்ல முயற்சி : சட்ட கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:20:37 AM (IST)









