» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பெண்களை தாக்கி, கொலை மிரட்டல் : திமுக நிர்வாகி மீது வழக்குப் பதிவு

திங்கள் 1, டிசம்பர் 2025 12:20:12 PM (IST)



தூத்துக்குடியில் பெண்களை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக நிர்வாகி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

தூத்துக்குடியில் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட சோட்டையன்தோப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றக்கோரி ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையாவை முற்றுகையிட்டு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது, பொதுமக்கள் மீது திமுக தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி பொறுப்பாளர் பொன்பாண்டி (எ) பார் ரவி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதில் காயம் அடைந்த இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேர் சிகிச்சைக்காக துத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் அளித்த புகாரின் பேரில், பெண்களை அவதூறாக பேசி, ஜாதி பெயரை கூறி, தாக்கி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பொன்பாண்டி (எ) பார் ரவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory