» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 7 நாட்களுக்கு பின்னர் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்!

திங்கள் 1, டிசம்பர் 2025 8:45:56 AM (IST)

டிட்வா புயல் அச்சுறுத்தல் விலகியதையடுத்து 7 நாட்களுக்கு பின்னர், தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் டிட்வா புயல் காரணமாக கடந்த ஏழு நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்நிலையில், நேற்று வெயில் தலைகாட்டியது. கடற்பகுதியில் காற்று குறைந்தது தொடர்ந்து மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீனவளத்துறை அனுமதி அளித்தது. 

இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து 112 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன. அதேபோன்று திரேஸ்புரம், மணப்பாடு, பெரியதாழை தருவைகுளம்  உள்ளிட்ட பகுதியிலிருந்து நாட்டுப் படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். ஏழு நாட்களுக்கு பின்பு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்,


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education




Thoothukudi Business Directory