» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாலையில் கிடந்த ரூ.2 லட்சத்தை போலீசில் ஒப்படைத்த வாலிபருக்கு பாராட்டு

திங்கள் 1, டிசம்பர் 2025 8:23:24 AM (IST)

கோவில்பட்டியில் சாலையில் தொழிலதிபர் தவறவிட்ட ரூ.2 லட்சத்தை போலீசில் ஒப்படைத்த வாலிபருக்கு பொதுமக்கள், போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இனாம் மணியாச்சியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (40). தொழிலதிபர். சம்பவத்தன்று இவர், கோவில்பட்டியில் உள்ள ஒரு அலுவலகத்தில் இருந்து ரூ.2 லட்சத்தை வாங்கி ஒரு பையில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு காரில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். அப்போது வழியில் இவரது பணப்பை சாலையில் தவறி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் மேற்கு போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், சாத்தூரை சேர்ந்த தீப்பெட்டி தொழிலாளி குமார் (30), இனாம்மணியாச்சி பகுதியில் அநாதையாக கிடந்த ரூ.2 லட்சத்துடன் கிடந்த பையை எடுத்து மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். சாலையில் கிடந்த அந்த பணத்தை நேர்மையாக ஒப்படைத்த குமாரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப்-இனஸ்பெக்டர் வேல்பாண்டியன் மற்றும் போலீசார் பாராட்டினர். பின்னர் அந்த பணத்தை ஜெய்சங்கரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory