» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கண்மாய் பகுதியில் பனை விதை நடும் பணி: யூனியன் சேர்மன் துவக்கி வைத்தார்!

வெள்ளி 8, நவம்பர் 2024 4:47:02 PM (IST)



ஓட்டப்பிடாரம் அருகே குப்பனாபுரம் நான்கு கண்மாய் பகுதிகளில் பத்தாயிரம் பனை விதைகள் நடவுப்பணியை யூனியன் சேர்மன் ரமேஷ் துவக்கி வைத்தார்.

தமிழ்நாட்டின் நீர் நிலைகளை பாதுகாக்கவும் மண் அரிப்பை தடுத்து மழை நீரை சேமிக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை  தன்னார்வ அமைப்புகளோடு இணைந்து 2024 நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டின் நீர் நிலைகளில் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணியினை மேற்கொண்டு வருகிறது. 

அதன்படி தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு ஓட்டப்பிடாரம் வட்டம் கீழமங்களம் ஊராட்சி குப்பனாபுரம் கிராம மக்கள் சார்பில் குப்பனாபுரம் நான்கு கண்மாய்களில் 10,000 பனை விதைகள் நடும்பணி திருவிழா நடை பெற்றது. கீழமங்களம் ஊராட்சி மன்றத்தலைவர் அ.ஜெயக்கனி தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு ஒன்றிய கவுன்சிலர் ஆ.அரிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். 

முன்னதாக தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிறுவனத்தலைவர் எம்.ஏ.தாமோதரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.சிறப்பு விருந்தினராக ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் லா.ரமேஷ் கலந்து கொண்டு பனைமரங்களின் நன்மைகள் குறித்து மக்களிடம் எடுத்துக்கூறி பத்தாயிரம் பனைவிதைகள் நடவுப்பணியை துவக்கி வைத்தார். எட்டு நாட்களாக சேகரிக்கப்பட்ட பத்தாயிரம் பனைவிதைகளையும் நான்கு குளத்தின் கரைகளிலும் நடவு செய்யப்பட்டது. 

இந்நிகழ்வில் வேளாண்மை உதவி இயக்குனர் ஆர்.சிவகாமி, நூறு நாள் வேலை திட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுகந்தி பாலிங்க், பணி மேற்பார்வையாளர் முரளி கிருஷ்ணன், ஊராட்சி செயலர் குருசாமி மற்றும் கிராம மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவுக்கான ஒருங்கிணைப்பு பணிகளை எம்.வினோத், டி. காசிங்க்ராஜ்,எம். குருச்செல்வம் கிராமத்தின் இளைஞர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பெண்கள் ஆகியோர் செய்து இருந்தனர். நிறைவாக பணித்தள பொருப்பாளர் ஜி.புஷ்பா நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





Thoothukudi Business Directory