» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இலவச சட்ட உதவி விழிப்புணர்வு பிரசார வாகனம் : முதன்மை மாவட்ட நீதிபதி தொடங்கி வைத்தார்!

செவ்வாய் 11, ஜூன் 2024 4:14:02 PM (IST)



தூத்துக்குடியில் இலவச சட்ட உதவி சம்மந்தமான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை முதன்மை மாவட்ட நீதிபதி (பொறுப்பு) தாண்டவன் தொடங்கி வைத்தார். 

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மொபைல் வேன் பிரச்சார விழிப்புணர்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதன்மை மாவட்ட நீதிபதி (பொறுப்பு) தாண்டவன் தலைமை வகித்து மொபைல் வேன் பிரச்சாரத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். 

பிறகு பொதுமக்களுக்கு இலவச சட்ட உதவி சம்மந்தமாக துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. மேற்படி நிகழ்வில் நீதிபதி பெருமக்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், காவல் துறையினர், வழக்காடிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேற்படி மொபைல் வேன் பிரச்சார நிகழ்வை தூத்துக்குடி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் (பொறுப்பு) பிஸ்மிதாஏற்பாடு செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors




Arputham Hospital





Thoothukudi Business Directory