» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இலவச சட்ட உதவி விழிப்புணர்வு பிரசார வாகனம் : முதன்மை மாவட்ட நீதிபதி தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 11, ஜூன் 2024 4:14:02 PM (IST)
தூத்துக்குடியில் இலவச சட்ட உதவி சம்மந்தமான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை முதன்மை மாவட்ட நீதிபதி (பொறுப்பு) தாண்டவன் தொடங்கி வைத்தார்.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மொபைல் வேன் பிரச்சார விழிப்புணர்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதன்மை மாவட்ட நீதிபதி (பொறுப்பு) தாண்டவன் தலைமை வகித்து மொபைல் வேன் பிரச்சாரத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பிறகு பொதுமக்களுக்கு இலவச சட்ட உதவி சம்மந்தமாக துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. மேற்படி நிகழ்வில் நீதிபதி பெருமக்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், காவல் துறையினர், வழக்காடிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேற்படி மொபைல் வேன் பிரச்சார நிகழ்வை தூத்துக்குடி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் (பொறுப்பு) பிஸ்மிதாஏற்பாடு செய்திருந்தார்.